Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேருக்கு நேர் மோதி ரயில் விபத்து…! தடம் புரண்ட இரயில் பெட்டிகள்…

Gowthami Subramani August 17, 2022 & 10:15 [IST]
நேருக்கு நேர் மோதி ரயில் விபத்து…! தடம் புரண்ட இரயில் பெட்டிகள்…Representative Image.

நேற்று, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த சமயத்தில் மராட்டிய மாநிலத்தின் கொண்டியா பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில், அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் வந்தது.

இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்கு உள்ளானது. அதிவேகத்தில் மோதிய இந்த ரயில் விபத்தால், பயணிகள் ரயிலில் உள்ள 3 பெட்டிகள் தடம் புரண்டது. இதனால், 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து, தகவலறிந்த சில நேரங்களிலேயே போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்