தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்,உதயநிதி ஸ்டாலினும் சந்தித்துப் பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுகவிற்குத் தலைவலியாக பாஜக மாறி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதன்படியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி போன்றே செயல்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகரின் அமைச்சர் பெண் ஒருவரை அடித்ததாகக் கூறி போராட்டம் நடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அரசியலில் அண்ணாமலையும், திமுகவின் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் எதிர் எதிர் துருவங்களாக அரசியல் களமாடி வரும் நிலையில் நேற்று இரவு இவர்கள் சந்தித்துக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் தயார் புஷ்பா நேற்றைய தினம் காலமானர். இந்நிலையில் அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அதன்படி அங்கு வந்த உதயநிதி ஸ்டாலினும், அண்ணாமலையும் சந்தித்துப் பேசிக்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…