கடுமையான வெப்ப அலைகளால் பிட்ரிட்டன் நாட்டின் விமான தளங்கள் உருகத்தொடங்கியுள்ளதாக அந்நாடு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
வரலாறு காணாத அதீத வெப்ப அலைகளில் சிக்கி ஐரோப்பிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெப்பம் கொளுத்தும் என அந்நாட்டு வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டு விமானப்படையின் மிகப்பெரிய விமான ஓடுதளமான Brize Norton, கடுமையான வெப்பத்தால் உருகியதால், விமான தளத்தில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக Sky News செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து, அதீத வெப்பத்தால், லண்டனில் உள்ள லூடன் விமான நிலையத்தின் ஓடுபாதையிலும் சேதமடைந்துள்ளதால், அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…