உக்ரைனின் 256 வீரர்கள் ரஷ்ய படையிடம் சரண்டர் ஆகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் மரியுபோல் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அந்நகரில் உள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ஈடுபட்டு வரும் நிலையில், 256 வீரர்கள் சரணடைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷ்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்து நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்று வந்த ஜப்பான் அரசு, அவற்றை நிறுத்தப்போவதாக அறிவித்தது. ஆனால் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதையடுத்து ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹயாஷி யோஷிமசா, ‘சீனா இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…