இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன் தென் சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் (2008-2012) மற்றும் 2000 ஆம் ஆண்டில் சியரா லியோனில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் பணியாளர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். அவர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் இரண்டு முதுகலை தத்துவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் அதிக அளவிலான படைகளில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மோகன் சுப்பிரமணியன் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது என்றும், தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி தெற்கு சூடானில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க சுப்பிரமணியன் பணியாற்றுவார் என நம்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…