அமெரிக்கா அதிபர் ஜோ.பைடனுடன் சீன அதிபர் தொலைபேசி வாயிலாக பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
தைவான் சீனாவின் ஒரு மாகணம் என சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தைவானுக்கு அமெரிக்கா உதவிகளை செய்து வருவதாகவும், சீனாவுக்கு எதிராக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி ஆசியா கண்டத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக சீனா தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானுக்கு நான்சி பெலோசி சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பெண்டகனுக்கு தெரிவித்தது. ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், சீனா ரஷ்யாவுக்கு உதவாமல் அடக்கி வசித்து வருகிறது. ஒரு வேளை நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால். இந்த நிலைப்பாட்டில் இருந்து சீனா மாறலாம் என்றும் ரஷ்யாவுக்கு அதிகப்படியான உதவிகளை செய்து ரஷ்யாவின் வெற்றிக்கு வழிவக்கும் என ராணுவ வியூகங்களை வகுக்கும் பொறியாளர்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு உளவுத்தகவல் ஒன்றை கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது. இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து 2 பேரும் பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…