திருப்பத்தூரில் முதல்வரின் வருகைக்காக வைக்கப்பட்ட வாழைத்தார்களை அங்கிருந்தவர்கள் பறித்து சென்றது நகைப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்கு செல்லும் அவர் நலத்திட்ட உதவிகளையும், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் முதல்வரின் வருகைக்காக திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முகப்பில் வாழைத்தார்கல் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் விழாவை முடித்துக்கொண்டு முதல்வர் சென்ற போது, பொதுமக்கள் கையோடு எடுத்து வந்திருந்த கத்திகளை கொண்டு வாழைத்தார்களை அறுத்து கொண்டு சென்றனர்.
இதேபோன்று வேலூரில் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவிற்காக மேடையில் வைக்கப்பட்ட இனிப்புகளை பொதுமக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அள்ளிச் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…