கடலூரில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியான சம்பத்தை அடுத்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் கடந்த 7ம் தேதி தவறான சிகிச்சையால் சிறுமி ரக்ஷிதா பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியது. இதனையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் சத்தியசீலன் மீது வேப்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைதொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேறு ஒரு நபரின் மருத்துவ சான்றிதழுடன் தன் புகைப்படத்தை ஒட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தலைமறைவான போலி மருத்துவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…