திருமணத்தில், மணமக்களுக்குப் பரிசளிக்கும் வகையில், தற்போது மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளியைப் பரிசாக வழங்கினர்.
ஒரு சில பேர் கடந்த சில நாள்களாக, என்னென்ன பொருள்கள் விலை மிக்கதாகக் கருதப்படுகிறதோ, அவற்றை எல்லாம் திருமண பரிசாக வழங்கி வருகின்றனர். அதன் படி, தக்காளி விலை உயர்ந்ததை அடுத்து, கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் அந்த இயக்கத்தில் பொருளாளராக இருக்கும் நபரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள், மணமக்களுக்கு ஒரு தட்டு முழுவதும் தக்காளியைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.
எவரும் எதிர்பார்க்காத வகையில், அமைந்ததால், இது திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…