தனியார் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவன உதவியுடன் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இநிநிலையில் இதற்கு 3மாதமாக தவனை செலுத்தவில்லை என்று நிதி நிறுவன ஊழியர் ரவிக்குமாரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரவிக்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகனின் தற்கொலை செய்தியை கேட்ட அவரது தந்தையும், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…