காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2, மற்றும் 4 தேதிகளில் இறைச்சி மற்றும் பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகின்ற 31.08.2022 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், 02.09.2022 மற்றும் 04.09.2022 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இருதினங்களுக்கு தங்களது கடையை முடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…