விருதுநகர் அருகே அரசுப்பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் என்பவரது மகள் சக்திமாரி (15). இவா், அருகிலுள்ள பனையூா் கிராம அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளாா். மாலை 5.15 மணியளவில் பள்ளியிலிருந்து மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளாா். ஆனால், சிறிது தொலைவில் மாணவி சக்திமாரி பேருந்திலிருந்து தவறி விழுந்ததையடுத்து, மாணவி மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தாா்.
இதனையடுத்து மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…