மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் எங்களை பாதிக்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்
3 மாதங்களை அடந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆர்ரம்பத்தில் உக்ரைன் கை ஓங்கி காணப்பட்டாலும், தற்போது ஐரோப்பிய நாடுகளின் ஆர்வக் குறைவு காரணமாக ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயுதன் கிடங்குகளை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின், ‘பொருளாதார தடைகள் எங்கள் பொருளாதாரத்தை எதுவும் செய்யவில்லை. நிதி சந்தை, வணிகம் அனைத்தும் சீராக நடைபெறுகிறது. பணவீக்கமும் குறைந்து வருகிறது’ என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…