நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆர்டரை மாற்றிக்கொடுத்த வெயிட்டரை சமையல்காரர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள பிவிஆர் சினிமா தியேட்டர் அருகே செயல்பட்டு வரும் நடசத்திர ஹோட்டல் ஒன்றில் ஜார்க்கண்டை சேர்ந்த மாதவ் மண்டல் என்பவர் சமையல் மாஸ்டராகவும், அதே ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால் என்பவர் வெயிட்டராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் பணியில் இருந்த போது, வாடிக்கையாளர் ஒருவர் தான் கொடுத்த ஆர்டரை மாற்றும் படி கேட்டுள்ளார். இதனையடுத்து வெயிட்டர் சமையல் மாஸ்டரிடம் சென்று ஆர்டரை மாற்றும் படி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாஸ்டர், வெயிட்டரிடம் வாக்குவதாம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கல் இருவரையும் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இருந்த போதிலும் கோபம் அடங்காமல் இருந்த சமையல் மாஸ்டர் காலையில் எழுந்தவுடன் வெயிட்டரிம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சமையல் கலைஞர் அருகில் இருந்த கத்தியால் வெயிட்டரை குத்தி கொலை செய்தார். கொலை செய்து விட்டு தப்பியோடாமல் போலீசார் வரும் வரை சமையல் மாஸ்டர் காத்திருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமையல் மாஸ்டரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணயில் இரவு அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால் வேலைப்பளு அதிகரித்ததாகவும், இதனால் மன அழுத்ததில் இருந்ததாகவும் அப்போது ஆர்டரை மாற்றியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…