ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3 வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!. இதனைதொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…