பாலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் துல்லிய ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இஸ்ரேல் படைகள் காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 வயது சிறுமி உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து தாக்குதலில் பலியான 5 வயது சிறுமியின் தாத்தா பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாகது, 5 வயது சிறுமி யார் மீது தாக்குதல் நடத்தினாள், அவள் நர்சரிக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்டாள். அவளுக்கு ஒரு பை மற்றும் துணி வேண்டும். இந்த அப்பாவிப் சிறுமி என்ன செய்தாள்? அவள் என்ன ராக்கெட்டுகளின் பொறுப்பாளராக இருந்தாளா? அல்லது சண்டையிட்டாளா?" என கண்ணீருடன் கேட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…