கிரிம்மியாவில் உள்ள ரஷ்யா ராணுவ தளம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தியை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான் போர் 150 வது நாளை கடந்து இன்னும் உக்கிரமாக நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் நீண்ட தூர வீச்சு கொண்ட ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
கிரிமியா வில் உள்ள ரஷ்யாவின் ராணுவ விமான தளத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு தீப் பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. ராணுவ தளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறின. இதற்கிடையே ரஷியா ராணுவ தளம் மீது உக்ரைனில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் அதை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…