நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தகவல்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…