அதிமுக அலுவலகத்திற்கு ஏன் சீல் வைக்கப்பட்டது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று விளக்கமளித்துள்ளார்.
அதில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே நேற்றைய தினம் கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதல் அப்பகுதியில் பதற்றம் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலை தடுக்க சென்ர காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சென்னை ராயப்பேட்டை காவல் ஆணையர் கட்சி அலுவலகத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்ட மோதலால் பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை வருவாய் கோட்ட அலுவரிடம் அறிக்கை அளித்துள்ளார்.
அதன்பேரில் வருவாய்கோட்ட அலுவலர் (தெற்கு/ உட்கோட்ட நடுவர், தென் சென்னை) சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தீவி சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்ப்பட்டு பொது அமைதி சீர்குலைந்து விடும் என்பதால், கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முஇடிவு செய்ய வரும் 25ம் தேதி இரு தரப்பினரும், தாமாவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகுமாறு வருவாய் கோட்ட அலுவலர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…