Politic News : தமிழகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் ரவுடிகளை அழைத்து வந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை அழைத்து வந்து கட்சிக்காரர்களை ஓபிஎஸ் தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது எனவும் இவரையெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு வெட்கப்படுகிறேன் எனவும் ஈபிஎஸ் கூறியுள்ளார்.
மேலும் “தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர் ஓபிஎஸ், இன்று கொடூரமாக அடித்து தாக்கிய கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது” என கூறியுள்ளார்.
மேலும், இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…