Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டீக்கடையில் மாமூல் கேட்டு அட்டகாசம் :- இளைஞர்களை அலேக்காக தூக்கிய போலீசார்..!

Bala August 11, 2022 & 14:19 [IST]
டீக்கடையில் மாமூல் கேட்டு அட்டகாசம் :- இளைஞர்களை அலேக்காக தூக்கிய போலீசார்..!Representative Image.


சேலத்தில் மாமூல் கேட்டு டீக்கடையை இளைஞர்கள் சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் தாதகாப்படி பில்லுகடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் அப்துல்சுப்பு என்பவர் டீ மாஸ்டராக பணியற்றி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த சிலர் சிகரெட் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இல்லை என்று கூறியதை அடுத்து கடையில் இருந்து சிகரெட் பாக்கெடுக்களை எடுத்து, புகையை அவர் மீது ஊதியுள்ளனர். மேலும், பிஸ்கட் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை உடைத்து மாமூல் கேட்டு அட்டகாசம் செய்துள்ளனர்.

இதனையடுத்து டீ மாஸ்டர், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அப்துல் சுப்புவை தாக்கியதாக. தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ்குமார், அப்துல் ஹரீன் மற்றும் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்