மக்களை காக்கப் பல அவதாரம் புரிந்து ஜெகத்தில் தர்மத்தை நிலை நிறுத்தும் இறைவன் திருமாலுக்கு உகந்த நாளான ஏகாதசி விரதம் நாம் இருப்போம். விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது எல்லா சூழ்நிலையிலும் சாதித்தியமாகது, அந்த மாதிரியான நேரத்தில் காக்கும் தெய்வம் பெருமாளை நினைத்து வணங்கி கீழ்வரும் மந்திரத்தைக் கூற வேண்டும்.
ஏகாதசி மந்திரம் (Ekadashi Mantra in Tamil)
கருணை உள்ளம் கொண்ட மும்மூர்த்திகளின் ஒருவரான திருமால் தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து தான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் தன் பக்தர்களுக்கு ஆபத்து என்றால் உதவிக்கரம் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்து தருவார் என்பதைப் பல புராணங்களின் மூலம் அறிந்துள்ளோம்.
திருமகளை தன் மனதில் குடி நிறுத்திய திருமாலுக்கு ஏகாதசி விரதம் இருப்பது என்பது மிகவும் நன்மை அளிக்கும், ஆனால் இன்று இருக்கும் அவசர உலகில் நம்மால் ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது குறைந்துவிட்டது.
ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்வதால் பல நன்மைகள் நம்மை வந்து சேரும். ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் காலை வேளையில் திருமாலை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி "ஓம் நமோ நாராயணாயா" என வணங்க வேண்டும்.
அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!
இந்த மந்திரத்தை ஏகாதசி தினத்தன்று சொல்வதால் நம்மை அறியாமல் செய்த கர்ம வினைப் பயன் அகன்று வளமான வாழ்க்கை வாழ பெருமாள் வழி செய்வார்.
மேலும் படிக்க:- ஐஸ்வர்யங்கள் பொங்கும் மெருமாள் மந்திரம்....! இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க...! உங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கும்! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…