குரு பகவான் மூல மந்திரம்:
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!
குரு பார்க்க கோடி நன்மை, குருவின் பார்வை பட்டாலே சகலமும் நமக்கு கிடைத்தருளும் என்பது ஐதீகம். அதனால் தான் மற்ற தெய்வங்களை எப்படி வழிபட்டாலும், குரு பகவானை மட்டும் நேருக்கு நேராக நின்று வணங்கச் சொல்கிறார்கள்.
எப்படி சொன்னால் என்ன பலன் கிடைக்கும்?
கல்வி, அறிவு, திருமணத்திற்கு காரணமான சுபகிரங்களில் ஒருவராக விளங்கும் குரு பகவானை தினமும் காலையில் அவருக்குரிய மூல மந்திரத்தை சொல்லி வணங்கி வந்தால் வாழ்வில் நல்லது நடக்கும். தினமும் சொல்ல முடியவில்லை என்றாலும், வியாழக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து முடித்ததும் இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை ஜெபிப்பவர்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதுவே, 40 நாட்களில் 16000 முறை ஜெபித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமண யோகம் இல்லாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். கடன் பிரச்சனை இருப்பவர்கள் விரைவில் கடனை அடைப்பீர்கள். கிரக தோஷம் இன்றி வாழ, குரு பகவான் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.
குரு பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…