மாங்கல்ய பலம் நீடிக்க பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களிலேயே முதன்மையான விரதம் இந்த காரடையான் விரதம். இதை காமாட்சி விரதம், சாவித்திரி விரதம், கௌரி விரதம் என்றும் சொல்வார்கள். எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனான சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரத்தைப் போற்றவும், உயிருடன் வாழும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எந்தவித குறையுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் இந்த சாவித்ரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட மனதிற்கு பிடித்த நல்ல கணவர்கள் அமையவும் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நாளிலேயே காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023 ம் ஆண்டில் மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை காரடையான் நோன்பு வருகிறது. இந்த நாளில் காலை 06.31 முதல் 06.47 வரை பூஜை மேற்கொண்டு தாலி கயிறு மாற்றிக் கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…