தங்களின் கணவன் நீண்ட ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் இருக்க வேண்டும் என்று சுமங்கலிகள் கொண்டாடும் நாள் தான் காரடையான் நோம்பு. அன்றைய நாளில் திருமணமான பெண்கள் அதிகாலையில் பெண்கள் எழுந்து நீராடி பால் பழம் சாப்பிட்டு விரதமிருக்க வேண்டும். விரதத்தின் பின்னர் நாம் வழிவழியாக செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி விரதமிருக்கும் பெண்கள் எப்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெண்கள் விரதம் இருக்கும் போது பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம் இது.
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்
புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
தங்களின் கணவனின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் வழிபாட்டின் போது தவறாமல் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ ஸர்வதா
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…