Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 5: கோவிலில் பிரகாசிக்கும் சாய்பாபாவுக்கு ஆரம்ப காலத்தில் கோவிலில் அனுமதி இல்லையாம்….! என்ன காரணம் தெரியுமா..?

Gowthami Subramani June 30, 2022 & 14:00 [IST]
Sai Baba History in Tamil Part 5: கோவிலில் பிரகாசிக்கும் சாய்பாபாவுக்கு ஆரம்ப காலத்தில் கோவிலில் அனுமதி இல்லையாம்….! என்ன காரணம் தெரியுமா..?Representative Image.

Saibaba History in Tamil Part 5: சாய் பாபா மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாகவும், தான் விரைவில் மடியவிருப்பதாகவும் கூறி கோபால் ராவ் குரு தனது சக்தி அனைத்தையும் சாய்பாபாவிற்கு அளித்தார்.

சாய்பாபாவின் மீது பொறாமை கொண்ட சீடர்கள் அவரைக் கொல்ல முயல்வதற்காக அவர் மீது கல் எறிந்துள்ளனர். ஆனால், இதனை அறிந்த குரு கோபால்ராவ் தனது சக்தியால், அந்த கல்லை அந்தரங்கத்தில் தொங்கச் செய்து, சாய்பாபாவைக் காப்பாற்றினார். ஆனால், எதிர்பாராத விதமாக வந்த மற்றொரு கல் கோபால் ராவ் குரு மீது விழுந்தது. இதனைத் தொடர்ந்து பற்பல நிகழ்வுகள் நடக்க, சாய்பாபாவைக் கொல்ல முயன்ற அந்த சிறுவனின் உயிர் மாண்டது. இதனால், அலறி அடித்துக் கொண்ட வந்த அந்த சிறுவனின் தந்தைக்காக, சாய்பாபா அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 4: உயிர் போன சிறுவனுக்கு, மீண்டும் உயிர்பிச்சை அளித்த சாயிபாபா….!


சாய்பாபாவின் புனித பயணம்

அதன் பின் சாய்பாபா, கோபால் ராவ் குருவின் வழிகாட்டுதலின் படி தனது பயணத்தைத் தொடங்கினார். இவ்வாறு ஒவ்வொரு கிராமமாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.

ஆனால், அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் தங்குவதற்கு விருப்பமில்லாமல் இருந்தார். அவ்வாறு சென்று கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த உணவில் பாதி உண்பதும், தூக்கி எறிந்து விடுவதுமாக இருந்தார். அதன் படி, மனதை ஒரு நிலையாக வைத்து, எஹிலும் ஈடுபடாமல், கால்போன படி நடந்து வந்து கொண்டிருந்தார். கடைசியில் ஒரு சிறிய கிராமத்துக்கு வந்து சேர்ந்து அங்கு இருந்த ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டார். அவர் வந்தடைந்த கிராமத்தின் பெயர் தான் ஷீரடி.

சாய்பாபாவை பொருட்படுத்தாத மக்கள்

16 வயது சிறுவனாக, ஷீரடியை வந்தடைந்த அந்த சிறுவனைக் கண்டு மக்கள் லட்சியம் செய்யவில்லை. அவர் இருந்த நிலையைக் கண்டு அவரை சிலர் கேனப்பக்கிரி என்று கூறி பரிசாசமும் செய்தனர். பாபா அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது இருந்தார். இன்னும் சில பேர், உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை ஏற்று ஓரளவு பசியைத் தணித்துத் தொண்டார் சாய்பாபா.

மழையால் கோவிலில் ஒதுங்குதல்

இவ்வாறு இருக்கும் சமயத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருந்த வேலையில், அந்த பகுதியில் இருந்து சென்று சற்று தொலைவில் இந்து கோவில் ஒன்றை அடைந்தார். அங்கே வெளிப்பிரகாரத்தில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், கோவில் நிர்வாகி ஒருவர் அந்த இடத்திற்கு வந்தார். நீ யார்..? இங்கு என்ன செய்கிறாய்..? உன்னைப் பார்த்தால் முஸ்லீம் போலத் தெரிகிறாய்.. என்று கேட்டார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 3: சாய்பாபாவைக் காப்பாற்றிய கோபால் ராவ் குரு….! ஆனால், குருவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன தெரியுமா..?


தங்குவதற்கு அனுமதி இல்லை

அதற்கு பாபா ஆம் என்று சிரித்தபடியே கூறினார். ஆனால், கோவில் நிர்வாகியோ அப்படியானால், நீ இந்த கோவிலில் தங்கக் கூடாது என்று கூறியினார். மேலும், வெளியே போய் விடு என்று கோபத்துடன் உரைச்சலிட்டார் அந்த கோவில் நிர்வாகி.

மீண்டும் வேப்பமரத்தடியில்

அதன் பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் வேப்ப மரத்தடியில் தங்கி விட்டார் சாய்பாபா. இங்கு உணவையும், உறக்கத்தையும் மறந்து அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பார். அவரது கண்களோ தியான நிலையில் இருக்கும். அந்த இடத்திற்கு வந்த அனைவருமே, அவரை அதிசயமாகக் கவனிக்க ஆரம்பித்தனர். சில பேர் அவரை புத்தி சுவாதீனம் இல்லாதவரோ என்று எண்ணி விட்டனர். பசி என்றும் கேட்க மாட்டார். அவரைத் தொட்டு கூப்பிட்டாலும் பதில் பேச மாட்டார்.

இவரது தோற்றத்தைக் கண்ட மக்கள் இவரை இஸ்லாமியராகவே கருதினர். இதனால், அந்த பகுதி மக்கள் அவரை வீட்டிற்கு அழைக்கத் தயங்கினர். வேப்ப மரத்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு பாழடைந்த மசூதியிலயே தங்கினார்.

இதன் பிறகு, பாபாவை எவ்வாறு ஷீரடி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil | Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Sai Baba History in Tamil | History of Shirdi Sai Baba | Sai Story Tamil | Sai Baba Story Tamil | Sai Baba Stories in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்