சித்திரை மாதத்தின் முதல் நாளை 'தமிழ் வருடப் பிறப்பாக' நாம் வருடா வருடம் கொண்டாடி வருகின்றோம். ஆங்கில புத்தாண்டிற்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு தமிழ் புத்தாண்டிற்கும் நம் தமிழ் மக்கள் கொடுத்து வருகின்றனர். இத்தகைய மங்களகரமான நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் வீட்டில் பழங்களை வைத்து 'சித்திரை கனி' பார்ப்பதும், பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் போன்றவையும் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும்.
பொதுவாக, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை செழிப்பாக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும், இந்த நன்னாளில் சில தவிர்ப்பதும் அவசியமாக கருதப்படுகிறது. சரிவாங்க, சித்திரை முதல் நாள் செய்யக்கூடாதவை என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் தீட்டுக் காரியங்கள் செய்வது, அசைவம் சமைப்பது, சாப்பிடுவது, முடி வெட்டுவது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதேபோல், ஒரு சிலருக்கு பண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்தவகையில், புத்தாண்டு அன்று வீட்டில் இருக்கும் ஒட்டடைகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். பழைய பொருட்களை தூக்கி எறிய கூடாது.
புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதேபோல், கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் செய்யவே கூடாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…