மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. விவசாயத்திற்கும், விவசாய மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் இந்த திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது அரசு எடுத்திருக்கும் முக்கிய நோக்கம் இயந்திரமயமாக்கல் திட்டமாகும்.
அதன் படி, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலை பண்ணையானது இயந்திரமயமாக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை குறிப்பாக விவசாயிகளின் பணிச்சுமையைக் குறைப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த திட்டத்தின் கீழ், பவர் டில்லர் மற்றும் டிரேக்டர் உள்ளிட்ட கருவிகளுக்கு அரசு மானியம் அறிவித்து வருகிறது.
அதன் படி, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பவர் டில்லரை 40% மானியத்தில் வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், டிராக்டர் வாங்குவதற்கு 25% அளவிலான மானியத் தொகையை வழங்க உள்ளது.
இவ்வாறு, 8BHP-க்கு மேல் வாங்கும் பவர் டில்லருக்கு, ரூ.60,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். அதே போல, 8BHP-க்குக் கீழ் பவர் டில்லர் வாங்குபவர்களுக்கு ரூ.40,000 மானியத் தொகை வழங்கப்படும்.
டிராக்டரைப் பொறுத்த வரை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 25% மானியத்தில் ரூ.75,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த இயந்திரமயமாக்குதலின் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…