விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணைத் தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, வருடந்தோறும் ரூ.6,000 வீதம் தவணைத் தொகையாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வழங்கப்படுகிறது. அதன் படி, இந்த பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதில், 12 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, பொருளாதார ரீதியில் வலுவடைந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த திட்டத்தில் தீபாவளி வரும் சமயத்தில் தவணைத் தொகை வெளியிடப்படுவது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாகவே, 11 ஆவது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இது குறித்து, மத்திய வேளாண்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது,”பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு 12 ஆவது தவணைத் தொகையை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இது அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் விடுவிக்கப்படும்” என கூறப்பட்டது.
மேலும், பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தங்களது கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன் படி, இந்த 12 கோடி விவசாயிகளுக்கு பிஎம் கிசான் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தலின் படி ஆதார் எண் சமர்ப்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…