வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது விவசாயிகளுக்கு அவ்வப்போது விபத்துகளை ஏற்படுவது வழக்கம் அவ்வாறு ஏற்படும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உழவர் விபத்து நலத்திட்டத்தின் கீழ் வயலில் வேலை பார்க்கும் பொது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்துகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு இழப்பீடு வழங்கப்படுகிறது, பெறத் தகுதிகள் எவை என்பவை குறித்து விவசாயிகள் தெரிந்துவைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க இந்த நடவடிக்கையை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் கையில் எடுத்துள்ளார். இத்தகைய நலத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகத் திகழ்கிறது.
கிசான் விபத்து கல்யாண் யோஜனா திட்டம்:
இந்த திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் போது இறந்த மற்றும் ஊனமுற்ற விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வடிவில் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் ஒரு விவசாயி விபத்தில் இறந்தால் அல்லது அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். அதேபோல், 60 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்ற விவசாயிக்கும் தலா ரூ. 5 லட்சம். இவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் மகள், மனைவி, பேரன், மகன், தாய் மற்றும் தந்தையின் நலனுக்காகவும், விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்பெற முடியும். விவசாயி இறந்த 45 நாட்களுக்குள் விவசாயியின் குடும்ப உறுப்பினர்கள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களுடன் படிவத்தை அருகிலுள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…