ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஆனி மாத ராசிபலன் 2023 கடகம்:
கடக ராசி நேயர்கள், ஆன்மீக வழிபாடு மிகச் சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களது 10 ஆம் வீட்டில் ராகு இருப்பது, உங்கள் தொழிலுக்கு சாதகமாக அமைகிறது. நீண்ட காலமாக, நீங்கள் எதிர்பார்த்த உத்தியோகம் உங்களுக்குக் கிடைக்க உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ற பணிகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். மேலும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கும், நீங்கள் எதிர்பார்த்தது நிகழ உங்களுக்கு சாதகமாக இந்த ஆனி மாதம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சுக்கிரன் மற்றும் செவ்வாய் உங்கள் ராசியில் அமர்கிறார்கள். இந்த நேரத்தில் நீண்ட காலமாக சொத்து வாங்க நினைத்தவர்களுக்கு இது சிறந்த காலமாக அமையும். இருப்பினும், சொத்து வாங்குவதிலோ, விற்பதிலோ மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது உத்தமம். அதே சமயம், ஒரு சிலர் தவறானவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல காலமாக இல்லை. எனவே, இந்த நேரத்தில் முதலீடு செய்யும் முன் அதிக கவனத்தில் ஈடுபடுவது நல்லது. இதனால், நிதியிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், கேது பகவான் சுபஸ்தானம், வண்டி வாகன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சனி வக்ர பெயர்ச்சி அடைவது கடக ராசி நேயர்களுக்கு மிகச் சிறந்த காலமாக அமையும். இதனால், இதுவரை இருந்த உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். இது ஒரு அற்புதமாக நல்ல உகந்த மாதமாக அமைகிறது. நண்பர்களிடம் பெற்ற கடன் தொகையைத் திருப்ப செலுத்த முடியாதவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக அமையும். இதுவரை திருப்பி கொடுக்க முடியாத கடன்களைத் திருப்பி கொடுக்கும் காலமாக அமைகிறது.
நீண்ட காலமாக தொழில் தொடங்க, வங்கியில் கடன் முயற்சி செய்வீர்கள். இது உங்களுக்கு சாதகமாக காலமாக அமைகிறது. அதே நேரத்தில், தேவையற்ற சில பிரச்சனைகளில் சந்திக்கக் கூடுவதாக அமையும். இந்த நேரத்தில், எந்த பிரச்சனைகளையும் எதிர்த்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் உண்டாகும். நீங்கள் விரும்பிய பணிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய உத்தியோகம் கிடைப்பதற்கான சாதகமாக அமைகிறது.
குரு பகவானின் பார்வையால், தாயாரின் உடல் நிலை மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், நீங்கள் எதிர்பார்த்தபடி, வாகனம் வாங்குதல், புதிய பணிகளில் சேர்தல், வீடு வாங்குதல் போன்ற அனைத்தும் நிறைவேறும் காலமாக அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…