ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஆனி மாத ராசிபலன் 2023 துலாம்:
சனி வக்ர பெயர்ச்சியின் காரணமாக, துலாம் ராசி நபர்களுக்கு சிறப்பான பலன்களைப் பெறப்போகின்றனர். உங்களது வீட்டின் 10 ஆவது இடத்தில் சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இது தொழிலில் மிகச்சிறந்த பலன்களைத் தருவதாகவும், சாத்தியமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒரு சிலர் நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்றவாறு புதியதாக சொத்து சேர்க்கை நிகழ்த்த எண்ணி இருப்பர். அவர்கள் அனைவருக்கும் இந்த ஆனி மாதம் உகந்த மாதமாக அமையும் எனக் கூறப்படுகிறது. ஒரு சிலர் நீண்ட காலமாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணி இருந்திருப்பர். அவர்களுக்கு உகந்த வகையில், இந்த மாதம் தாய், தந்தையருடனோ அல்லது சகோதர, சகோதரிகளுடனோ, கலந்து ஆலோசித்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
அதே சமயம், கேது பகவான் உங்கள் ராசியில் அமைவதால், நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு சற்று பின்னடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்த வரை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. உங்களது ஏழாம் ஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பது, மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இந்த காலகட்டத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது.
சனி பகவான், பூர்வ புண்ணிய ஸ்தானமான பிள்ளைகள் ஸ்தானத்தில் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். இதனால், ஒரு சில தம்பதிகள் குழந்தைகள் வரம் இல்லாமல் உள்ளனர். இந்த காலம் உங்களுக்குச் சிறப்பானதாக அமையும். தம்பதிகள் குலதெய்வ வழிபாடு செய்தால், குழந்தைகள் வரன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குரு பகவான் ராகுவுடன் சேர்ந்து இருப்பது, கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் விலகி விடவும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்குக் கடன் தர நினைப்பவர்கள், நன்கு ஆலோசித்து தருவது நல்லது. அதே போல, கடன் வாங்குவதிலும் சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு பிரச்சனைகளை மேற்கொண்டவர்களுக்கு, இந்த காலம் சிறந்ததாக அமைகிறது. மேலும், குரு பகவானால், பொருளாதார வரவு சிறப்பாக உள்ளது. லாபகரமான வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்குச் சிறப்பைத் தரவல்லது.
துலாம் ராசி நபர்களுக்கு உகந்தவர் சுக்கிர பகவான் என்பதால், விஷ்ணு பகவான், ராமன் அல்லது ஆஞ்சநேயப் பெருமானை வழிபடுவது சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…