நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சியின் மூலம் செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
உங்களின் மீதான இருந்து வந்த சில வதந்திகளுக்கு முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலருடைய தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாட்டில் அவர்களின் விருப்பமில்லாமல் தலையிட வேண்டாம். பிற மொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து சேமிப்பை மேம்படுத்த இயலும்.
பணி/வேலை:
பணியில் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பும் பாராட்டுக்களும் கிடைக்க பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உடன் இருக்கக்கூடியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வேலை நிமித்தமான பொறுப்புகள் ஓரளவு குறையும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அனுபவமும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவீர்கள். பிறமொழி சார்ந்த துறை மற்றும் கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி நிமித்தமான பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களிடத்தில் காணப்பட்ட குறைகளை நிறைகளாக மாற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுக்கான மதிப்பும் மரியாதையும் மேம்படும். பத்திரிகை சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும்.
தொழில்/வியாபாரம்:
வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்க பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் மனம் பெற்று பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். எதிர்பாராத பொருட்சேர்ப்பை உண்டாகும். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். புதிய மனை சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். குறுகிய கால பயிர்களின் மூலம் நன்மை உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உடல் ஆரோக்கியம்:
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களில் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வகை உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது அஜீரண கோளாறுகளை குறைக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.
குடும்ப வாழ்க்கை:
தம்பதியர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது நிதானம் வேண்டும். ஒரு சிலருக்கு தாய்மாமன் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். காதலர்கள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்க பெறுவீர்கள். தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குழந்தைகளிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். உயர்நிலைக் கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்:
தினந்தோறும் ராகு கேதுவுடன் இருக்கக்கூடிய விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் மேலும் பல நற்பலன்களை பெற முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…