மனிதர்கள் மட்டும் அல்லாது தேவர்களும் பார்த்து நடுங்கும் ஒருவர் தான் சனி பகவான். இவரின் பார்வையானது நமக்கு தீமைகளை அளிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும். சனீஸ்வரர் அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் பலன் அளிப்பார். நவகிரகங்களில் மெதுவாக நகர்வது இவர் மட்டும் தான். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றை இவரின் காலத்தில் நாம் அனுபவிக்க நேரிடும்.
இந்த காலங்களில் நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும் சனி பகவானுக்கு நம் மீது இருக்கும் கோபத்தை குறைக்க சில பரிகாரம் மற்றும் அவரை வாழ்த்தி சொல்லும் ஸ்தோத்திரம் உள்ளன. அவற்றைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பிராத்தனை செய்யலாம். சனி பகவானுக்கு பிடித்த கருப்பு ஆடை, நல்லெண்ணெய், கருப்பு பருப்பு ஆகியவற்றை தனமாக அளிக்கலாம்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
இந்த ஸ்தோத்திரத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் சொல்லி வந்தால் சனி பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். மேலும் நமக்கு நேர இருக்கும் தீமைகள் நம்மை விட்டு நீங்கிவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…