அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணதிற்கான சம்மந்தம் சற்று இழுபறியாகத் தான் இருக்கும். இருப்பினும் நல்ல படியாக திருமணம் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும் காலமாக அமையும். ஆகையால் சண்டை அதிகரிக்கும் தருணத்தில் விட்டு கொடுத்து போவது மிகவும் நல்லது. இதனால் திருமண வாழ்வில் எந்த சிக்கலும் இன்றி மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அமையும் காலம் இது. வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிப்பதால் நல்ல லாபமும் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மங்கலராகரமான நிகழ்வுகள் நடக்கும். உயர் படிப்பை பற்றிய சிந்தனை கொண்டவர்கள் விரும்பியது நிச்சயம் நடைபெறும். ஆனால் அதற்கான முயற்சிகளை நீங்கள் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும். முதலீடு குறித்த யோசனை இருந்தால் சிறிது காலம் அதனை தவிர்ப்பது புத்திசாலித்தனம். தந்தை வழியில் இருந்து உங்களுக்கு வந்து சேர வேண்டியவை வரும் காலம். வெளிநாடு செல்ல மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கை கூடி வரும். சகோதரர்களுக்கு இடையே இருந்த சண்டைகள் நீங்கும். உடல் சார்ந்த தொந்தரவுகள் வருவதால் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம் - நரசிம்ம மற்றும் கால பைரவர் இருவருள் ஒருவரை வழிபாடு செய்வதால் முன்னேற்றம் அதிகரித்து வாழ்வில் நன்றாக இருக்க உதவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…