அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
வேலைக்காக விடா முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கூடிய விரையில் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து சிறிதளவு முன்னேற்றம் காணப்படும். அதிகப்படியான முதலீடு செய்து தொழில் மேற்கொள்ள நினைப்பவர்களின் கவனத்திற்கு, கிரக நிலைகளின் மாற்றங்கள் இருப்பதால் அதிக பணம் முதலீட்டை தவிர்ப்பது ஆக சிறந்தது. நீங்கள் சம்பாதிப்பதை மனை, நகை ஆபரணங்கள் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
பிள்ளைகள் கல்வியில் சற்று ஆர்வமுற்றவர்கள் போல இருந்தாலும் கூட, அவர்கள் நல்ல படியாக படிப்பை முடித்து விடுவார்கள். தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் உங்களுக்கு உடல் சம்மந்தமான பிரச்சனைகள் வந்து வந்து நீங்கும். காதல் திருமணம் சக்சஸ் ஆகும், இருப்பினும் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெற முயற்சி செய்யுங்கள். வெளிநாடு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அந்த வேலை கை கூடி வரும். திருமண யோகம் இருக்கும், ஆனால் வரன் அமைவதற்குள் நீங்கள் ஒருவழி ஆகிவிடுவீர்கள். உங்களுக்கு சாதகமாக வழக்குகளின் தீர்ப்புகள் இருக்கும்.
பரிகாரம் - உங்கள் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு மாதத்தில் நரசிம்மரை செவ்வாய் கிழமையில் மாலை நேரத்தில் வழிபாடு செய்தால் வரும் துன்பங்கள் கிட்ட நெருங்க முடியாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…