அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில், உடல்நிலை மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனைத்திலும் பின்னடைந்து இருப்பீர்கள். ஆனால் இந்த தமிழ் புத்தாண்டு காலம் உங்களுக்கு எல்லாவற்றிலும் ஏற்றத்திற்கான அமைப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு திருமண அமைப்பு உள்ள மாதமாக இருக்கிறது. தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்யோனியம் அதிகரிக்கும். தொழில் செய்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் நல்ல வளர்ச்சி இருக்கும், லாபமும் நன்றாக அமையும்.
ஒருவேளை புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால் ஆரம்பிக்கலாம். முதலீடு செய்பவர்களுக்கு ஏற்றது போல லாபம் அமையும். பொருளாதாரம் அதிகரிக்கும் அம்சம் உள்ளதால் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கை கூடி வரும். கடன் சுமைகள் குறையும். இதுவரை இருந்த உடல் சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வராது என்று நினைத்துக்கொண்டிருந்த வரவு பாக்கிகள் உங்களை வந்து சேரும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மேலும் மன ரீதியான குழப்பங்கள் ஏற்படலாம் ஆகையால் எப்போது பாசிட்டிவாக சிந்தியுங்கள்.
பரிகாரம் - வெள்ளிக்கிழமையில் விநாயகரை வழிபாடு செய்து நற்பலன்களை பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…