அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
நீங்கள் எதிர்பார்த்த வேலையை காட்டிலும் சற்று பின்தங்கி தான் கிடைக்கும். எனவே, செய்கின்ற வேலையை மனதார விரும்பி செய்யுங்கள் அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்பினால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சிகரமான காலமாக இருக்கும். பல சிக்கல்களைத் தாண்டி தான் திருமணம் நடைபெறும். ஆகையால் அதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளுங்கள். மருத்துவ உதவிகளுடன் புத்திர பாக்கியம் கிடைக்கும். எனவே, குலதெய்வத்தை வழிபாடு செய்து நன்மையை பெறுங்கள்.
பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். வரும் வரவுகளை தேவையான சொத்துக்களாக மாற்றிக்கொள்ளுங்கள். இதன் மூலம் வரவு உங்களுக்கு ஒரு அஸெட் போல ஆகிவிடும். எனவே, அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. உடல் நிலை சம்மந்தமான தொந்தரவுகளில் தான் ஏற்கனவே இருப்பீர்கள், ஆனால் அது கூடுதலாக அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செலவுகள் அதிகரிக்கலாம். அதே போல தொழிலில் வரவு வந்தால் அதனை மற்றவர்களிடம் பகிர்வதை தவித்து விடுங்கள். இதுவே உங்களுக்கு பாதி துன்பங்களை குறைத்துவிடும். உறவுகளுக்கு இடையில் சிக்கல் ஏற்படும் எனவே தேவையில்லாத இடங்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.
பரிகாரம் - செய்வாய்கிழமையில் உக்கிர தெய்வங்கள் [காலபைரவர், துர்க்கை, நரசிம்மர்] யாறேனையும் வழிபாடு செய்வதனால் வரும் துன்பங்களை உங்களை விட்டு விலகிவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…