நல்ல நேரம்:
காலை: 10.45 – 11.45 வரை
மாலை: இல்லை
Tomorrow Rasi Palan: மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 12 ஆம் நாள் வியாழக்கி ழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
துலாம்
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனையால் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனம் தளர வேண்டாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். எதை பேசுவதற்கு முன்பு அதில் இருக்கும் நன்மை தீமைகளை அறிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அனத்தம் உங்களுக்க தான். ஒரு சிலருக்கு பரிசு காத்திருக்கிறது. அது எதுவாகவும் இருக்கலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கவலை!
விருச்சிகம்
இன்னைக்கு உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். எந்த காரியத்தை துணிச்சலோடு செய்து வெற்றிக் காண்பீர்கள். பணம் சம்பந்தமான பேச்சுகளில் பொறுமை அவசியம். நெருங்கிய உறவினர்கள் வழியாக மங்களகரமான சுபசெய்திகள் தேடி வரும். மனையின் உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும். சுபம்!
தனுசு
எந்த காரியத்தை செய்வதாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விலை மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு போவதற்கு வாய்ப்புள்ளது, கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எல்லோருக்கும் தேடிப்போய் உதவி செய்வீர்கள். அதனால், எல்லோரும் வாயாரப் பாராட்டுவார்கள். பாராட்டு!
மகரம்
பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெருங்கிய உறவினர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள், இதனால் வீட்டில் ஆனந்தம், மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விலையுயர்ந்த பொருட்கள் வாங்க யோகம் உண்டு. பிள்ளைகள் பெருமைபடும்படி நடிந்துக் கொள்வார்கள். எச்சரிக்கை!
கும்பம்
இவ்வளவு நாட்களாக இருந்து வந்த அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாரா செலவுகள் வரும், சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். வியாபாரத்தில் உங்களுடைய யோசனைகள், திட்டங்களை வெளியில் கூறாமல் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையில்லா மனஉலைச்சலுக்கு வழிவகுக்கும். ரகசியம்!
மீனம்
கடந்த காலத்தை பற்றி யோசிப்பது வேஸ்ட். அது உங்களுக்கு மனஉலச்சலை தான் ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இதனால் டென்ஷனாகி வேலையில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இதற்கிடையில் நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனைவியிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். சிந்தனை!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…