வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் கடக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த வைகாசி மாதத்தில் கடக ராசி அல்லது கடக லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏராளமான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். தந்தை வழியில் மிகுந்த நற்பலன்களைப் பெறுவீர்கள். அரசு வழி சார்ந்து மிகப் பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த மாதம் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கக் கூடிய மாதமாக அமைகிறது. மிகப்பெரிய வேலை ப்ராப்தம், தொழில் ப்ராப்தம் என அனைத்தும் சிறப்பாக உள்ளது. மகன் மூலமாக மிகப்பெரிய அருமையான வாய்ப்பைப் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வும் சிறப்பாக உள்ளது. தொழிலதிபராக உருவாகும் மாதமாக இம்மாதம் உள்ளது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறக்கூடிய மாதம். எல்லா விதமான தோஷங்களும் நிவர்த்தி அடையக்கூடிய மாதம். எல்லா பிரச்சனைகளும் விரைவில் முடிவடைந்து விடும்.
லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நடைபெறும். தலை, நெற்றி உடல் உறுப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் விட்டுக் கொடுத்துச் செல்வது சிறப்பு. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. காதலர்களுக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இல்லையெனில் பிரிந்து செல்வதற்கான சூழல் உண்டாகும். இடமாற்றம் ஏற்படுவதற்கான நிலை ஏற்படும். பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இந்த மாதம் அருமையான காலகட்டமாக அமைகிறது.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: பத்ரகாளியம்மன் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தை அளிக்க வல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…