தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,00த்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.40,448 க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,056-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.73க்கு விற்பனையாகி வருவதோடு, ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…