கடந்த அக்டோபர் 6 ஆம் நாள், தமிழக அரசு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியது. இவ்வாறு இணைத்தால் மட்டுமே அரசு வழங்கக் கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.
அதன் படி, தமிழகத்தில் இலவச மின்சாரத்தையும், மானிய விலையில் மின்சாரத்தையும் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் எப்படி இணைக்கலாம் என்பதைப் பற்றி காண்போம்.
ஆதார் கார்டு இல்லாத நபர்கள், புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்த நகலுடன், ரேஷன் அட்டை, பாஸ்புக், வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வைத்து, இலவச மற்றும் மானிய மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
மின் பகிர்வு நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில், Consumer Info-வின் கீழ், மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்கை வெளியிடும்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://adhar.tnebltd.org/Aadhaar/
அதில் உள்ள தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
மேலும், ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்தும் போது மின்சார நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தகவல் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இலவச மற்றும் மானிய மின்சாரம் பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன் மின்சார நுகர்வோர் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…