இப்போ எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது, அதனால் இந்த காலத்து இளைஞர்கள் டெக்னாலஜியில் பூந்து விளையாடுவார்கள். ஆனால் நமக்கு முன்னர் ஜெனெரேஷன் இதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பும் வேலை இருக்கே, சொல்லவா வேணும். நாம் அனுப்பிய பணம் சரியாக போய் சேருமா சேராதா என்று பதற்றத்திலையே இருப்பார்கள். ஒருவேளை நாம் அனுப்பிய பணம் குறிப்பிட்ட நபருக்கு போய் சேர வில்லை என்றால் என்ன செய்யலாம் என்பதை தான் இந்த பதிவில் பாப்போம்.
டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்ய NEFT, RTGS, IMPS, UPI ஆகிய வழிகளில் செய்யலாம். இப்படி நம்முடைய வங்கி கணக்கில் இருந்து மற்றவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப - அவருடைய பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், IFSC code மற்றும் UPI ID போன்ற அனைத்து விவரங்களும் தேவைப்படுகிறது. எனவே, இந்த விவரங்களை கொடுக்கும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து கொடுக்கவும்.
சரி அப்படி அந்த விவரங்களை தரும் போது ஏதேனும் ஒரு எண் மாறி விட்டால், உங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படும். ஆனால் நீங்கள் தவறுதலாக தந்த வங்கிக் கணக்கு இல்லவே இல்லை என்றால் ஒன்றில் இருந்து மூன்று நாட்களுக்குள் கிரெடிட் ஆகிவிடும். அப்படியும் பணம் வரவில்லை என்றால், நீங்கள் வங்கிக்கு சென்று புகார் அளிக்கலாம். அவர்கள் பண்ணத்தை உங்கள் அக்கவுண்டிற்கு மாற்றி விடுவார்கள்.
அதாவது உங்களுடைய வங்கி கணக்கும், நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய நபரின் வங்கி கணக்கும் ஒன்றாக இருக்கலாம். அப்படி இருந்தால் தகுந்த ஆதாரங்களை சேகரித்து வங்கியில் புகார் அளிக்க வேண்டும். ஒரு சில இக்கட்டான நேரங்களில் பணம் தவறுதலாக அனுப்பப்பட்டவரின் ஒப்புதல் பெற்று உங்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள். இதற்கு சில நாட்கள் ஆகலாம், அதுவரை காத்திருக்க வேண்டும்.
இல்ல உங்களுடையதும் நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பியவரின் வங்கியும் வேற வேறையாக இருந்தால் கொஞ்சம் சிக்கல் தான். அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் பணம் அனுப்பிய ஷ்கிரீன் ஷாட், வங்கி கணக்கு எண், நேரம் இப்படி அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து உங்களுடைய வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் அந்த வங்கியிடம் பேசி பிரச்சனையை முடித்து பணத்தை பெற்றுத் தருவார்கள். இதற்கு எவ்ளோ நாள் ஆகும் என்று சரியாக கூற முடியாது, நீங்கள் பொறுமை காத்திருப்பது அவசியம்.
அப்படி நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய நபர் திரும்ப தர மறுத்துவிட்டால் நீங்கள் தான் சட்ட ரீதியாக போராட வேண்டும். அதற்குதேவையான ஆவணங்களை இரண்டு வங்கியும் உங்களுடம் கொடுத்து விடும். ஆனால் மற்றதை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…