இந்தியாவில் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு வரும் (ஜூன்30) 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமக்கள் தங்களது பான்கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை காலஅவகாசம் அளித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த காரணத்தால், கடந்த மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
அந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக் வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 13 நாட்களில் காலக்கெடு முடிவடையுவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பான் மற்றும் ஆதார் எண்களை விரைவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி இணைக்கத் தவறும் நபர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும், வரி, ரீ-பன்ட் உள்ளிட்ட சேவைகளை பெற இயலாது என்றும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை முதலே பான் - ஆதார் இணைப்பு மேற்கொள்ளும் நபர்களிடம் 1,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அபராதத்துடன் கூடிய இறுதிக்காலக்கெடுவும் வரும் 30ம் தேதியுடன் முடிவடைவதால், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு பான்-ஆதார் இணைப்பை விரைந்து மேற்கொள்ள வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…