தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் பரிசுத் தொகை அல்லது பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். அதன் படி, இந்த ஆண்டும் தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு ரேஷன் கார்டுதாரர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன் படி, வங்கிக் கணக்கு திறப்பது குறித்த அனைத்துத் தகவல்களையும் இந்தப் பதிவில் காணலாம்.
தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு, முந்திரி உள்ளிட்ட பல்வேறு பொங்கல் தொகுப்புகளுடன் ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் ஒவ்வொரு ரேஷன்அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த வரை ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரூ.2000 ஆக அதிகரித்துக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பொங்கல் பரிசாக 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை அளித்தது. இது தரமற்று இருந்ததாக புகார்கள் எழுந்தது. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தினை அளித்தது. எனவே, பொங்கல் பரிசாக இந்த முறை என்ன வழங்கலாம் என பல்வேறு விவாதங்கள் எழுந்தது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் விவாதித்து பின்னர், ரூ.1000 தொகையை ரொக்கமாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளது.
இது குறித்து கடந்த 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று, அதில் இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளின் நிறம் மற்றும் டிசைனில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
மோசடிகளைத் தவிர்க்க
அதன் படி, வரும் பொங்கல் பண்டிகைக்கு, பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனவும், இது அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மோசடி செய்வதைத் தடுக்கலம் எனவும் கூறப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம், மோசடி இல்லாமல், அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…