மக்களின் நலனுக்காக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. அந்தவகையில், மூத்த குடிமக்கள், சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரித்தித் திட்டம், மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று மத்திய அரசானது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1% ஆகவே உள்ளது. அதன் படி, இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் தொடங்கக் கூடிய காலாண்டில், சில சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 70 அடிப்படைப்புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, வரும் மாதம் முதல், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8%-லிருந்து 8.2% ஆக உயர்த்தியுள்ளது. மேலும், கிசான் விகாஸ் பத்ராவுக்கான வட்டி விகிதத்தை 7.2%லிருந்து 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1, 2 3 மற்றும் 5 ஆண்டு கால வைப்புகளுக்கும் மத்திய அரசு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன படி, மாதாந்திர வருமான கணக்கு திட்டத்தின் வட்டி விகிதமானது 7.1%-லிருந்து 7.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ்களின் வட்டி விகிதம் 7%-லிருந்து 7.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 7.6%-லிருந்து 8% ஆக வட்டி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…