Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Priyanka Hochumin Updated:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புRepresentative Image.

தமிழகத்தில் 10 ஆம் பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு தேர்வு இயக்ககம். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து 10ம் வகுப்பில் ஏற்கனவே அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கான அறிவியல் தனித்தேர்வுக்கான அறிவிப்பை அரசு தேர்வு துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புRepresentative Image

அதில், நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனித்தேர்வர்கள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற இருக்கும் அறிவியல் பாட செய்முறை தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறாமல் இதில் பங்கேற்குமாறு தேர்வு இயக்ககம் அறிவுறுத்துகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்