தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, தொடக்கக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா காலத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல், கொரோனா காலத்தில் மாணவர்கள் கற்றல் வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மீண்டும் கொண்டு வரவேண்டிய நோக்கத்திலேயே, தொடக்கக் கல்வித்துறை மாணவர்கள் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் படி, செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை கூறியுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு குறிப்பிடப்பட்ட பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…