தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
தஞ்சை
வேலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
விழுப்புரம்
பெரம்பலூர்
கடலூர்
அரியலூர்
சேலம்
புதுக்கோட்டை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
ராமநாதபுரம்
மதுரை
திருச்சி
கரூர்
தேனி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
நாமக்கல்
சிவகங்கை
கரூர்
தருமபுரி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை
புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…