தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தன. மேலும், இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…